அழகிய தவறுகள் - II



*************************



மூன்றாம் வரிசை பெண்

என்னைப் பார்த்து முறைத்தபடி

நான்காவது தடவையாக

மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்

கவனிக்கவே துவங்கினேன்

எடுப்பான அவளது மார்பகத்தை....



*************************



விலகிய சேலையில்

மழையில் நனைந்தபடி

கடக்கும் பின்னிருக்கை யுவதியின்

சலனம் தவிர்க்க

வண்டியை விரட்டினேன்

பாவம்

மழையில் நனைந்த மனம்

சேலையினுள்ளேயே கிடக்கிறது.




*************************



இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும்

டவுண் சந்தி பிள்ளையார் முக்கில்

ஒரு பக்க திறந்த மார்புடன்

அலைந்த கோட்டிகாரியின்

நினைவு தவிர்க்க முடியாததாகிறது

தெரிந்தே பார்வை தவறும் சில பொழுதுகளில்....



*************************



படித்ததில் பிடித்தது.


கையில் காசு இருந்தால்

டாஸ்மாக் பக்கம் போவான்.

இல்லையென்றால் செய்யது பீடி

குடித்துகொண்டிருப்பான்.

அதுவும் இல்லையென்றால்

கவிதை எழுதிக்கொண்டிருப்பான்.

- விக்ரமாதித்யன்.



*************************


Read Users' Comments ( 5 )